Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பை இந்தியாவால் தடுக்க முடியுமா?

Advertiesment
இந்தியா
, வெள்ளி, 28 ஜூன் 2019 (16:44 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் பாகிஸ்தான் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றியும் மூன்றில் தோல்வியும் அடைந்துள்ளது. ஒரு போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதால் தற்போது அந்த அணி 7 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. இனிவரும் வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பாகிஸ்தான் வென்றால் 11 புள்ளிகள் பெற்று 4வது இடத்தை பிடித்துவிடும்.
 
ஆனால் அதனால் மட்டும் அந்த அணி அரையிறுதிக்கு சென்றுவிட முடியாது. வங்கதேசம், இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகள் மீதமிருக்கும் போட்டிகளில் வெற்றி பெற்றால் பாகிஸ்தான் அணியை விட அதிக புள்ளிகளோ அல்லது 11 புள்ளிகளுடன் அதிக ரன்ரெட்டோ பெற்று பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளிவிடு அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும்
 
இந்த நிலையில் இந்தியா தனது அடுத்த போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுவிட்டால் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும். அதன்பின் வங்கதேசம், இலங்கை அணிகளிடம் வேண்டுமென்றே தோல்வி அடைந்தால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்வதை இந்தியாவால் தடுக்க முடியும் என்றும், இந்தியா இதனை செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும்,  பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாசித் அலி தெரிவித்துள்ளார்.
 
ஆனால் இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடத்தை பிடிக்கவே முயற்சிக்கும் என்றும் பாசித் அலி, இந்திய அணி மீது வீண்பழி சுமத்துவதாகவும் கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா vs இங்கிலாந்து… பாகிஸ்தான் ரசிகர்க்ள் ஆதரவு யாருக்கு ? – வீரரின் கேள்விக்கு அதிர்ச்சியளிக்கும் பதில்கள் !