Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவை கண்டிப்பாக பாகிஸ்தான் வெல்லும்… அடித்து சொல்லும் பாக் முன்னாள் வீரர்!

Webdunia
வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (13:14 IST)
வரும் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் தொடங்குகிறது. இந்த முறை உலகக் கோப்பையில் 10 அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அரசியல் சூழல் காரணமாக இந்த தொடரில் பாகிஸ்தான் கலந்து கொள்வது சம்மந்தமாக இழுபறியான சூழல் நிலவியது.

ஆனால் இப்போது பாகிஸ்தான் அணி கலந்துகொள்ள அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. முதலில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டி அக்டோபர் 15 ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது ஒருநாள் முன்னதாக அக்டோபர் 14 ஆம் தேதி நடக்க உள்ளது.

இந்த உலகக் கோப்பை தொடரிலேயே  அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டியாக இந்தியா பாகிஸ்தான் போட்டிதான் கருதப்படுகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணிதான் கண்டிப்பாக வெல்லும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஆகிப் ஜாவேத் உறுதியாகக் கூறியுள்ளார். இதுவரை பாகிஸ்தான் அணி , இந்தியாவை உலகக் கோப்பை போட்டிகளில் ஒரே ஒருமுறைதான் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோப்பையுடன் தாயகம் புறப்பட்ட இந்திய வீரர்கள்.! பிரதமர் மோடியுடன் நாளை சந்திப்பு..!!

ரிட்டையர்மெண்ட்லாம் இல்ல… இன்னும் வேல பாக்கி இருக்கு- மில்லர் திடீர் அறிவிப்பு!

களத்தில் கோபமாக இருக்கும் கேப்டனின் கீழ் யாரும் விளையாட மாட்டார்கள்.. யாரை சொல்கிறார் ரியான் பராக்?

பல விமர்சனங்களை சந்தித்த யோ யோ டெஸ்ட்டை நீக்க முடிவு செய்துள்ளதா பிசிசிஐ?

நான் இனிமேல் கிரிக்கெட் பார்க்கப் போவதில்லை… ரியான் பராக்கின் பேச்சை வெளுத்து வாங்கிய ஸ்ரீசாந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments