Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவை கண்டிப்பாக பாகிஸ்தான் வெல்லும்… அடித்து சொல்லும் பாக் முன்னாள் வீரர்!

Webdunia
வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (13:14 IST)
வரும் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் தொடங்குகிறது. இந்த முறை உலகக் கோப்பையில் 10 அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அரசியல் சூழல் காரணமாக இந்த தொடரில் பாகிஸ்தான் கலந்து கொள்வது சம்மந்தமாக இழுபறியான சூழல் நிலவியது.

ஆனால் இப்போது பாகிஸ்தான் அணி கலந்துகொள்ள அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. முதலில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டி அக்டோபர் 15 ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது ஒருநாள் முன்னதாக அக்டோபர் 14 ஆம் தேதி நடக்க உள்ளது.

இந்த உலகக் கோப்பை தொடரிலேயே  அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டியாக இந்தியா பாகிஸ்தான் போட்டிதான் கருதப்படுகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணிதான் கண்டிப்பாக வெல்லும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஆகிப் ஜாவேத் உறுதியாகக் கூறியுள்ளார். இதுவரை பாகிஸ்தான் அணி , இந்தியாவை உலகக் கோப்பை போட்டிகளில் ஒரே ஒருமுறைதான் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘ ஈ சாலா கப் நம்தே’ என சொல்வதை நிறுத்துங்கள்… முன்னாள் வீரருக்குக் கோலி அனுப்பிய குறுஞ்செய்தி!

மனைவிக்கு எத்தனைக் கோடி ஜீவனாம்சம் கொடுக்கிறார் சஹால்?... வெளியான தகவல்!

அவர் இருப்பதால் கோலி அழுத்தமில்லாமல் விளையாடலாம்- டிவில்லியர்ஸ் கருத்து!

மும்பை இந்தியன்ஸ் அணிக்குக் கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்..!

15 நிமிடங்களில் விற்று தீர்ந்த சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட்: ரசிகர்கள் ஏமாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments