Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நியுசிலாந்து அணிக்கு திரும்பிய வீரர்!.. உலகக் கோப்பையில் விளையாட வாய்ப்பு!

ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நியுசிலாந்து அணிக்கு திரும்பிய வீரர்!.. உலகக் கோப்பையில் விளையாட வாய்ப்பு!
, வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (12:07 IST)
நியுசிலாந்து அணியின் ட்ரண்ட் போல்ட் உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக கருதப்படுபவர். இந்நிலையில் அவர் நியுசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மைய உறுப்பினர் ஒப்பந்தத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதன் மூலம் அவர் இனிமேல் நியுசிலாந்து அணிக்காக விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதனால் கடந்த ஒரு வருடமாக அவர் நியுசிலாந்து அணிக்காக விளையாடவில்லை. இதையடுத்து இப்போது அவர் இங்கிலாந்துக்கு செல்லு நியுசிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளார். அதே போல காயம் காரணமாக விளையாடாமல் இருந்த கைல் ஜேமிசனும் அணிக்குள் திரும்பியுள்ளார்.

ஒரு ஆண்டுக்கு பிறகு அணிக்குள் திரும்பியுள்ளதால் டர்ண்ட் போல்ட் உலகக் கோப்பைக்கான நியுசிலாந்து அணியிலும் இடம்பிடிப்பார் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்து அசத்திய பிருத்வி ஷா!