Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் - வங்காளதேசம் இடையே 2வது டெஸ்ட்; ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.. என்ன காரணம்?

Mahendran
வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (10:05 IST)
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கிடையே நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ரசிகர்கள் அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கும் நிலையில் முதல் டெஸ்ட் போட்டி வரும் 21ஆம் தேதி தொடங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி 30ஆம் தேதி கராச்சி நகரில் நடைபெற உள்ளது.
 
இந்த நிலையில் கராச்சியில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை செய்யப்பட்டிருந்தால் அதற்கான தொகை முழுவதுமாக திருப்பி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பாகிஸ்தானில் இன்னும் சில மாதங்களில் சாம்பியன் டிராபி தொடர் நடைபெற இருக்கும் நிலையில் கராச்சி மைதானத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அதனால் தான் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றும் ரசிகர்களின் பாதுகாப்பை கணக்கில் கொண்டு தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத ஷர்துல் தாக்கூர்… இந்த அணியில் இணைகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments