Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச களத்தில் மீண்டும் பி வி சிந்து…நம்பிக்கையுடன் களமிறங்கல்!

Webdunia
புதன், 23 டிசம்பர் 2020 (11:16 IST)
இந்திய பேட்மிண்ட்டன் வீரர் பி வி சிந்து மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு நடந்த பேட்மிண்ட்டன் போட்டியில் வெள்ளி வென்று அசத்தியவர் இந்தியாவைச் சேர்ந்த பி  வி சிந்து. அதன் பின்னர் கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்றார். இந்தியாவில் பேட்மிண்ட்டன் விளையாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார். இந்நிலையில் பயிற்சியாளர் மற்றும் குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக பி.வி. சிந்து லண்டன் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

ஆனால் இதை அவர் மறுத்துள்ளார். ஊட்டச்சத்து ஆலோசனைகள் மற்றும் உடற்பயிற்சி ஆலோசனைகளை பெறுவதற்காகவே லண்டன் வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தினமும் பெற்றோரிடம் தொலைபேசி மூலம் பேசி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அதே போல பயிற்சியாளர் கோபிசந்துடனும் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை எனத் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இப்போது தான் ஓய்வு பெற போவதாக பி வி சிந்து தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அந்த செய்தி உண்மை இல்லை என்பது பின்னர் தெரிய வந்தது.

இந்நிலையில் இப்போது பி வி சிந்து தாய்லாந்து ஓபன், டயோட்டா தாய்லாந்து ஓபன், உலக டூர் இறுதி சுற்று போட்டிகளில் பங்கேற்று விளையாடுவார் என இந்திய பேட்மிண்ட்டன் சங்கம் தெரிவித்துள்ளது. இதை உறுதி செய்த பி வி சிந்து 8  மாதங்களுக்குப் பிறகு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை உறுதி செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணன் என்னடா.. தம்பி என்னடா..! ஆட்டம்னு வந்துட்டா! தம்பி டீமை பொளந்து கட்டிய அண்ணன் க்ருனால் பாண்ட்யா!

மேல ஏறி வறோம்.. ஒதுங்கி நில்லு..! வொர்த்து மேட்ச் வர்மா..! - அட்டகாசம் செய்த RCB கோப்பையையும் வெல்லுமா?

ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டு வருமா சிஎஸ்கே? இன்று பஞ்சாப் உடன் மோதல்..!

The Greatest of all time! T20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த ஒரே இந்திய வீரர்! மாஸ் காட்டிய King Kohli!

MI vs RCB! ஆத்தி.. என்னா அடி! Power Play-ல் பொளந்து கட்டிய கோலி-படிக்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments