Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காமன்வெல்த் போட்டி அணிவகுப்பில் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார் பி.வி.சிந்து

காமன்வெல்த் போட்டி அணிவகுப்பில் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார் பி.வி.சிந்து
, சனி, 24 மார்ச் 2018 (17:06 IST)
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் காமன்வெல்த் போட்டி தொடக்க விழாவில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்.

 
 
ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் போட்டி வருகிற ஏப்ரல் 4-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிகளில் ஆஸ்திரேலியா, இந்தியா, கனடா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியா சார்பில் 14 விளையாட்டுகளில் 219 வீரர்- வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
 
இந்த போட்டிகளுக்கான தொடக்க விழா ஏப்ரல் 4-ந் தேதி கார்ரா ஸ்டேடியத்தில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த தொடக்க விழாவில் அனைத்து நாட்டு கொடிகளையும் ஒவ்வொரு நாட்டு வீரர்-வீராங்கனைகளும் ஏந்தி செல்வர். அவர் பின்னர் அந்த நாட்டு வீரர்கள் அணிவகுத்து செல்வார்கள்.
webdunia
 
இந்நிலையில்,காமன்வெல்த் போட்டிகளுக்கான நடக்கவுள்ள தொடக்கவிழாவில் இந்திய அணி சார்ப்பில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோலிக்கு தொடர் ஓய்வு: பிசிசிஐ மாஸ்டர் ப்ளான்...