Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்னும் இரண்டே போட்டிகள், இருப்பினும் பிளே ஆஃப் யார் என தெரியவில்லை!

இன்னும் இரண்டே போட்டிகள், இருப்பினும் பிளே ஆஃப் யார் என தெரியவில்லை!
, திங்கள், 2 நவம்பர் 2020 (07:31 IST)
இன்னும் இரண்டே போட்டிகள், இருப்பினும் பிளே ஆஃப் யார் என தெரியவில்லை!

இன்னும் இரண்டே போட்டிகள், இருப்பினும் பிளே ஆஃப் யார் என தெரியவில்லை!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடையும் உள்ளன. இன்றும் நாளையும் என மொத்தம் இன்னும் இரண்டு லீக் போட்டிகளை உள்ளன. இந்த லீக் போட்டிகளில் உள்ள முடிவுகளைப் பொறுத்தே பிளே ஆப் சுற்றில் தகுதி பெறும் 3 அணிகளின் நிலை தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று நடைபெறும் டெல்லி மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி கண்டிப்பாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நாளை நடைபெறும் போட்டியின் முடிவை பொறுத்தே மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் பிடிக்கும் அணியின் விவரங்கள் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த தொடரில் பஞ்சாப், சென்னை மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் வெளியேறிவிட்டது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. நாளைய போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றால் அந்த அணி மூன்றாவது இடத்தை பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. லீக் போட்டிகள் முடிவடையும் நாளில் தான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் அணிகள் குறித்த விபரங்கள் தெரிய வரும் என்பது ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா அபார வெற்றி, 8ஆம் இடத்தில் இருந்து 4ஆம் இடம்!