Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிகிடியின் ஒரே ஒரு ஓவரால் தோல்வி அடைந்த சிஎஸ்கே அணி!

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2020 (07:18 IST)
நிகிடியின் ஒரே ஒரு ஓவரால் தோல்வி அடைந்த சிஎஸ்கே அணி!
நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய நிலையில் ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
 
நேற்றைய போட்டியின் தோல்விக்கு முக்கிய காரணமாக நிகிடி வீசிய 20 ஓவர் தான் என்று கிரிக்கெட் ரசிகர்களின் கருத்தாக உள்ளது 
 
19வது ஓவரில் முடிவு வரை ராஜஸ்தான் அணி எடுத்து இருந்த மொத்த ரன்கள் 187 ரன்கள் மட்டுமே. சென்னை அணியும் 19வது ஓவரில் 179 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 20 ஓவரில் இரண்டு நோபால்கள் மற்றும் ஒரு வைட் உள்பட மொத்தம் 30 ரன்கள் நிகிடி கொடுத்ததால் 216 ரன்கள் என்ற இலக்கை ராஜஸ்தான் அடைய முடிந்தது 
 
20 ஆவது ஓவரில் நிகிடி 30 ரன்கள் வாரி வழங்கியதால் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் நேற்றைய போட்டியில் பியூஷ் சாவ்லா 55 ரன்கள் கொடுத்ததும் தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தது. நிகிடி மற்றும் பியூஷ் ஆகிய இருவரும் வீசிய மோசமான பந்து வீச்சே நேற்றைய போட்டியில் சிஎஸ்கேவின் தோல்விக்கு காரணம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments