Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நண்பனுக்காக உருகும் நெய்மர்

நண்பனுக்காக உருகும் நெய்மர்
, செவ்வாய், 12 ஜூலை 2016 (12:45 IST)
மெஸ்ஸி இல்லாமல் கால்பந்து விளையாட்டு கால்பந்தாக இருக்காது என்று நெய்மர் கூறியுள்ளார்.



கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி சிலியிடம் தோற்றது. இதனால் மிகவும் விரக்தியடைந்த மெஸ்ஸி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரின் இந்த முடிவு ரசிகர்கள் மட்டுமன்றி சக கால்பந்து வீரர்களையும் மிகவும் அதிர்ச்சியடையச் செய்தது. இது தொடர்பாக பிரேசில் கால்பந்து வீரரும், பார்சிலோனா கிளப் அணியில் விளையாடும் சக வீரருமான நெய்மர் கூறுகையில்,மெஸ்ஸி எடுத்துள்ள இந்த முடிவை நான் மதிக்கிறேன். ஆனால் அவர் இல்லாமல் கால்பந்து விளையாட்டு கால்பந்தாக இருக்காது. அவர் இல்லை என்பதை நம்பவே கடினமாக இருக்கிறது. அவர் அர்ஜென்டினா அணிக்கும், பார்சிலோனா அணிக்கும் பல சாதனைகளை செய்துள்ளார் என்று கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இவர்தான் கிறிஸ் கெய்லின் ‘குடிகார கூட்டாளி’ - இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பதிவேற்றம்