Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரொனால்டோ சாதனையை முறியடித்த நெய்மார் – இன்னும் பீலே மட்டும்தான் பாக்கி!

Webdunia
புதன், 14 அக்டோபர் 2020 (16:55 IST)
பிரேசில் அணியைச் சேர்ந்த நெய்மார் தனது அணிக்காக அதிக கோல்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

2010 ஆம் ஆண்டு முதல் பிரேசில் அணிக்காக விளையாடி வருகிறார் நெய்மார். இதுவரை 103 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 64 கோல்களை அடித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னதாக நடந்த உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் பெரூ அணிக்கு விளையாடிய போது ஹாட்ரிக் கோல் அடித்தார். அதன் மூலம் பிரேசில் அணிக்காக 62 கோல்களை அடித்த ரொனால்டோவின் சாதனையை முறியடித்தார்.

இவருக்கு கால்பந்து உலகின் ஜாம்பவான் பீலே மட்டுமே உள்ளார். அவர் பிரேசிலுக்காக 77 கோல்களை அடித்துள்ளார். அந்த சாதனையையும் நெய்மார் விரைவில் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments