Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டியை நடத்த மற்றொரு நாடு விருப்பம் – சம்மதிக்குமா பிசிசிஐ?

Webdunia
திங்கள், 6 ஜூலை 2020 (18:09 IST)
ஐபிஎல் 2020 தொடரை நடத்த நியுசிலாந்து கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

உலகின் அதிக லாபம் கொட்டும் விளையாட்டுத் தொடர்களில் ஒன்றாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உள்ளது. இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக மார்ச் மாதம் தொடங்க இருந்த ஐபிஎல் 2020 சீசன் காலவரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது அதனால் ஏற்படும் வருவாய் இழப்பைக் கணக்கில் கொண்டு எப்படியாவது நடத்தி தீர்வது என பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இதனால் வெளிநாடுகளில் ஆளில்லாத மைதானங்களில் நடத்த திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இது சம்மந்தமாக ஐக்கிய அரபுகள் அமீரகம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது நியுசிலாந்து கிரிக்கெட் வாரியம் தற்போது விருப்பம் தெரிவித்துள்ளது.

நியுசிலாந்தில் கொரோனா வைரஸ் முழுக்கட்டுப்பாட்டில் உள்ளதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தகவல் வெளியானது. இந்நிலையில் நியுசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் விருப்பத்தை பிசிசிஐ பரிசீலிக்குமா என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யாவை முதுகில் குத்துகிறார்களா மும்பை இந்தியன்ஸ் சீனியர் வீரர்கள்!

ஏன் கான்வேயை ரிட்டையர்ட் ஹர்ட் செய்தோம்…காரணம் சொன்ன ருத்துராஜ்!

லார்ட் ஷர்துல்னா சும்மாவா? ஐபிஎல்லில் படைத்த மோசமான புதிய சாதனை!

தோனி வந்தா கழட்டுவாருன்னு சொன்னீங்க.. இந்த ப்ளேயரை இறக்குங்க! அடிக்கலைன்னா என் வீடு உங்களுக்கு! - CSK ரசிகர் சவால்!

6 பந்துகளில் 6 சிக்ஸர்.. ஐபிஎல்-ல் சாதனை சதம்… ‘யாரு சாமி இந்த பையன்?’ என வியக்கவைக்கும் பிரயான்ஷ் ஆர்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments