Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா!

vinoth
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (15:54 IST)
ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் ஆயிரக் கணக்கான வீரர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வருகின்றனர். இந்த தொடரில் தற்போது இந்திய வீரர்கள் சிலர் நம்பிக்கையளிக்கும் விதமாக விளையாடி வருகின்றனர்.

துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். அதையடுத்து கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.  அதே போல ஹாக்கி போட்டியிலும் இந்திய அணி முன்னேறி வருகிறது. இந்நிலையில் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா நம்பிக்கை அளிக்கும் விதமாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

இதற்கான தகுதிச் சுற்றில் தனது முதல் வீச்சில் 89.34 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தார். இதன் மூலம் அவர் நேரடியாக இறுதிச் சுற்று போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 84 மீ தூரம் எறிந்தாலே நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறலாம் என்பதால் அவர் நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் விக்கெட்டை வீழ்த்தியதில் வருத்தம்தான்… RCB வீரர் யாஷ் தயாள் கருத்து!

டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த கேப்டனாக நீங்கள் இருக்கிறீர்கள்… கோலியைப் பாராட்டிய கம்பீர்!

கோலி- கம்பீர் உரையாடல் வீடியோவை வெளியிட பிசிசிஐ திட்டம்!

RCB அணிக்காக அதை செய்யவேண்டும் என்பது என் ஆசை- ஆலோசகர் பொறுப்பேற்கும் தினேஷ் கார்த்திக்!

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி.! அட்டவணையை வெளியிட்ட ஐசிசி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments