Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராத் கோஹ்லி செஞ்சுரி வீண்.. பிளே ஆப் சென்றது மும்பை..!

Webdunia
திங்கள், 22 மே 2023 (00:12 IST)
இன்று நடைபெற்ற குஜராத் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றதை அடுத்து மும்பை அணி நான்காவது அணியாக பிளே ஆப் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டி இன்று பெங்களூரு மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடந்தது. இந்த போட்டியில் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்து 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் அடித்தது. விராட் கோலி 101 ரன்கள் அடித்தார். 
 
இதனை அடுத்து 198 என்ற இலக்கை நோக்கி குஜராத் அணி விளையாடி நிலையில் சுப்மன் கில் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். விஜய் சங்கர் 53 ரன்கள் எடுத்தார் 
 
இன்றைய போட்டியில் குஜராத் அணி வென்றதை அடுத்து 16 புள்ளிகள் பெற்ற மும்பை அணி பிளே ஆப் தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
23ஆம் தேதி நடைபெறும் முதல் குவாலிபயர் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணியும், 24ஆம் தேதி நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் மும்பை மற்றும் லக்னோ அணியும் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments