Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை வெற்றி அடைந்தாலும் திக் திக் தான்.. ஆர்சிபி கையில் தான் பிளே ஆப் வாய்ப்பு..!

Webdunia
ஞாயிறு, 21 மே 2023 (19:29 IST)
இன்று நடைபெற்ற மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றாலும் அந்த அணி 16 புள்ளிகள் உடன் மைனஸ் ரன் ரேட்டில் இருப்பதால் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது என்று உறுதியாக சொல்ல முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது. 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது. 201 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி 18 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. மும்பை அணியின் கேமரூன் கிரீன் மிக அபாரமாக விளையாடி 100 ரன்கள் அடித்தார். 
 
இதனை அடுத்து மும்பை அணி தற்போது புள்ளி பட்டியலில் 16 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தில் இருந்தாலும் இன்று நடைபெற உள்ள பெங்களூர் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவில் தான் பிளே ஆப் செல்லும் நான்காவது அணி மும்பையா? அல்லது பெங்களூரா? என்பது தெரியவரும். 
 
பெங்களூர் அணி பிளஸ் ரன்ரேட்டில் இருப்பதால் அந்த அணி வெற்றி பெற்றாலே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். ஒருவேளை பெங்களூர் அணி தோல்வி அடைந்தால் மும்பை தகுதி பெறுஇம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments