Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி 2018: மும்பை, உபி அணிகள் வெற்றி

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2018 (22:47 IST)
கடந்த இரண்டு மாதங்களாக புரோ கபடி லீக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று நடந்த இரண்டு போட்டிகளில் மும்பை மற்றும் உபி அணிகள் வெற்றி பெற்றன

இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் மும்பை அணி டெல்லி அணியுடன் மோதியது. ஆரம்பம் முதலே மும்பை அணியின் கை ஓங்கியிருந்தது. அந்த அணி எந்த நிலையிலும் புள்ளிகளின் பின்வாங்கவே இல்லை. இறுதியில் 44-19 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

அதேபோல் இன்று நடைபெற்ற இன்னொரு போட்டியில் உபி அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடன் மோதியது. இந்த போட்டி இரு அணி வீரர்களுக்கும் சவாலாக இருந்தாலும் உபி அணி இறுதியில் 27-20 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

இன்றைய நிலையில் ஏ பிரிவில் 77 புள்ளிகளுடன் மும்பை முதலிடத்திலும், 73 புள்ளிகள் பெற்று குஜராத் 2வது இடத்திலும், 60 புள்ளிகளுடன் டெல்லி அணி 3வது இடத்திலும் உள்ளது. அதேபோல் பி பிரிவில் 59 புள்ளிகளுடன் பெங்களூரு முதலிடத்திலும், 51 புள்ளிகள் பெற்று பாட்னா 2வது இடத்திலும், 44 புள்ளிகளுடன் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 3வது இடத்திலும் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LSG vs KKR: நாங்களும் ரவுடிதான்..! போராடி தோற்ற கொல்கத்தா! ரிஷப் பண்ட் நிம்மதி பெருமூச்சு!

LSG vs KKR: Badass மிட்செல் மார்ஷ், மரண மாஸ் நிகோலஸ் பூரன்! LSG அதிரடி ஆட்டம்! - சிக்கலில் KKR!

பாஜகவில் இணைந்த சிஎஸ்கே நட்சத்திர கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ்!

அண்ணன் என்னடா.. தம்பி என்னடா..! ஆட்டம்னு வந்துட்டா! தம்பி டீமை பொளந்து கட்டிய அண்ணன் க்ருனால் பாண்ட்யா!

மேல ஏறி வறோம்.. ஒதுங்கி நில்லு..! வொர்த்து மேட்ச் வர்மா..! - அட்டகாசம் செய்த RCB கோப்பையையும் வெல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments