Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரன் கூட ஓடாமல் அடிபட்ட பவுலரிடம் ஓடிய சிராஜ் – ரசிகர்களிடம் இருந்து குவியும் பாராட்டு!

ரன் கூட ஓடாமல் அடிபட்ட பவுலரிடம் ஓடிய சிராஜ் – ரசிகர்களிடம் இருந்து குவியும் பாராட்டு!
, சனி, 12 டிசம்பர் 2020 (08:49 IST)
ரன் ஓடாமல் அடிபட்டு கிடந்தவீரருக்கு உதவ சென்ற முகமது சிராஜின் செயல் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

கிரிக்கெட்டை ஜெண்டில்மேன்களின் விளையாட்டு என கூறுவர். அதை நிருபிக்கும் வண்ணம் அடிக்கடி ஏதேனும் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். அது போல நேற்றைய போட்டியில் ஆஸி பந்து வீச்சாளர் கேமரூன் க்ரீன் வீசிய பந்தை பூம்ரா நேராக அடித்தார். ஆனால் பந்தை பிடிக்க முயன்ற கிரீனுக்கு தலையில் அடிபட்டது.

இதைக் கவனிக்காத பூம்ரா ரன் எடுக்க ஓடிவர ஆரம்பித்தார். ஆனால் பவுலருக்கு அடிபட்டு இருப்பதைப் பார்த்த சிராஜ் ரன் ஓடாமல் பவுலரின் அருகில் சென்று அவருக்கு உதவ முயன்றார். பின்னர் நடுவரும் அங்கு வந்தார். இந்த சம்பவம் குறித்து சிராஜுக்கு பலரும் சமூகவலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி – நியுசிலாந்து வலுவான ஸ்கோர்!