Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கம்பீரின் கிரிக்கெட் முடிவுக்கு வந்தது என்னால்தான் – பாக் வீரர் சர்ச்சைப் பேச்சு !

Webdunia
செவ்வாய், 8 அக்டோபர் 2019 (07:37 IST)
பாகிஸ்தான் வீரர் முகமது இர்பான் கவுதம் கம்பீரின் கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு வந்தது என்னால்தான் எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பவுலரான முகமது இர்பான் அவரது உயரத்திற்காக சர்வதேசப் போட்டிகளில் கவனம் பெற்றார். இதுவரைப் பாகிஸ்தான் அணிக்காக 60 ஒருநாள் போட்டிகளிலும், 20 டி 20 போட்டிகளிலும், 4 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேசப் போட்டிகளில் விளையாடாமல் இருந்து வருகிறார்.

இவர் சமீபத்தில் பாகிஸ்தாலில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ’2012-ம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடந்த தொடரோடு கம்பீரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அந்தத் தொடரில் அவரை நான் 4 முறை ஆட்டமிழக்க செய்தேன். அந்தத் தொடரின் போது அவர் என் முகத்தையே பார்க்கமாட்டார். வலைப்பயிற்சியில் கூட என் முகத்தைப் பார்க்க விரும்பமாட்டார். அந்த தொடரில் சொதப்பிய பின் இங்கிலாந்து தொடரில் மட்டும் இந்திய அணியில் கம்பீர் இடம் பெற்றார். அதன் பின் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. ஒருவகையில் அவரது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து வைத்தது நான்தான் எனக் கூறலாம். விராட் கோலி கூட உங்கள் உயரத்தை வைத்து பந்தின் வேகத்தைக் கணிக்க முடியவில்லை என என்னிடம் கூறியுள்ளார்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் அணியாக ஃபைனலுக்கு சென்றது பெங்களூரு.. படுதோல்வி அடைந்த பஞ்சாப்..!

101க்கு ஆல்-அவுட்.. முக்கியப் போட்டியில் கோட்டை விட்டதா பஞ்சாப்? பெங்களூரு பவுலிங் அபாரம்..!

பவர்ப்ளேயில் ஆர்சிபியின் ஆதிக்கம்.. விக்கெட்டுகளை இழந்து தவிக்கும் பஞ்சாப்! RCB vs PBKS Live updates in Tamil

நேரடியாக ஃபைனலுக்கு போவது யார்? டாஸ் வென்ற ஆர்சிபி எடுத்த முடிவு..!

நான் தேர்வாளர் இல்லை… ஸ்ரேயாஸ் ஐயர் குறித்தக் கேள்விக்கு கம்பீர் காட்டமான பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments