Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவர்களை மின்னல் தாக்கினால்தான் உண்டு – முகமது யூசுப் கிண்டல் !

Webdunia
வெள்ளி, 5 ஜூலை 2019 (11:35 IST)
பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதிப்பெற வேண்டுமானால் எதிரணி வீரர்களை மின்னல் தாக்கினால்தான் உண்டு என பாக் முன்னாள் கேப்டன் முகமது யூசுப் கேல் செய்துள்ளார்.

உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரெலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் தகுதிப்பெற்று விட்டன. நியுசிலாந்து அணியும் கிட்டத்தட்ட தகுதிப் பெற்று விட்டது. ஆனால் இன்று பாகிஸ்தான் பங்களாதேஷ் அணியை 311 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே ரன்ரேட் அடிப்படையில் நியுசிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி அரையிறுதிக்கு முன்னேறலாம்.

ஆனால் இதற்கு வாய்ப்பே இல்லை என கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் முகமது யூசுப் அந்நாட்டு ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலில் ‘எவ்வளவுதான் கத்துக்குட்டி அணியாக இருந்தாலும் 311 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற இயலாது. எதிரணியினரை மின்னல் தாக்கவேண்டும் என வேண்டினால்தான் உண்டு’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் ப்ளே ஆஃபில் KKR vs SRH… குவாலிஃபையர் போட்டியில் வெற்றி யாருக்கு?

இன்றைய தகுதி சுற்றில் மழை பெய்ய வாய்ப்பு? மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்?

நேரடியாக இறுதி சுற்றுக்கு போவது யார்? கொல்கத்தா – ஐதராபாத் அணிகள் இன்று மோதல்!

நான்தான் சி எஸ் கே அணியின் முதல் கேப்டனாகி இருக்கவேண்டியது… பல ஆண்டுகளுக்கு பிறகு சேவாக் பகிர்ந்த சீக்ரெட்!

தோனியை அவரது அறைக்கே சென்று சந்தித்த கோலி… சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி!

அடுத்த கட்டுரையில்
Show comments