Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய பிரபல கிரிக்கெட் வீரர்

ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய பிரபல கிரிக்கெட் வீரர்
, புதன், 23 செப்டம்பர் 2020 (16:59 IST)
ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய பிரபல கிரிக்கெட் வீரர்
ஐபிஎல் போட்டியில் இருந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் மிட்செல் மார்ஷ் விலகி இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி அந்த அணியின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது 
 
சமீபத்தில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பந்து வீச்சாளர் மிட்செல் மார்ஷ் பந்து வீசிய போது திடீரென காயம் ஏற்பட்டதால் இவர் நான்கு பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் போட்டியில் இருந்து வெளியேறினார்
 
இதனை அடுத்து பேட்டிங் செய்யும்போது ஹைதராபாத் அணி இக்கட்டான நிலையில் இருந்ததால் மீண்டும் அவர் பேட்டிங் செய்ய வந்தார். ஆனால் ஒரே ஒரு பந்து மட்டும் சந்தித்த இவர் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் காயம் காரணமாக அவர் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகியதாக அதிகாரபூர்வமாக ஐதராபாத் அணி அறிவித்துள்ளது. இதனை அடுத்து அவர் தனது சொந்த நாடு திரும்ப உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மிட்செல் மார்ஷ் அணியில் இருந்து விலகி உள்ளது அந்த அணியின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோனி கேப்டன்சிக்கு 4 மதிப்பெண்தான் கொடுப்பேன்… முன்னணி வீரரின் ஆதங்கம்!