Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெய்மார் உள்ள பிஎஸ்ஜி அணியில் இணைந்த மெஸ்சி! – ரசிகர்கள் கொண்டாட்டம்!

Webdunia
செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (16:38 IST)
கால்பந்தாட்ட போட்டிகளின் க்ளப் ஆட்டங்களில் பார்சிலோனாவிலிருந்து விலகிய மெஸ்சி பிஎஸ்ஜியில் இணைந்துள்ளார்.

பிரபல கால்பந்து அணி வீரரான லியோனல் மெஸ்சி கடந்த 17 ஆண்டுகளாக க்ளப் ஆட்டங்களில் எஃப்சி பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். இவரது சகாக்களான சௌரெஸ் உள்ளிட்டோர் வேறு அணிகளுக்கு மாறிய போதும் தொடர்ந்து பார்சிலோனாவுக்காக விளையாடியவர் மெஸ்சி.

பார்சிலோனா என்றாலே மெஸ்சி என்ற அடையாளம் மாறி தற்போது ஒப்பந்தம் முடிந்து பார்சிலோனா அணியை விட்டு வெளியேறியுள்ளார் மெஸ்சி. பார்சிலோனாவிலிருந்து விலகியதை தொடர்ந்து பிரபலமான மற்றொரு அணியான பிஎஸ்ஜியில் இணைவார் என பரவலாக பேசிக் கொள்ளப்பட்டது.

அதுபோலவே தற்போது பிஎஸ்ஜி அணிக்காக இரண்டு ஆண்டுகள் விளையாட மெஸ்சி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த அணியில் பிரபல மெக்ஸிக கால்பந்து வீரர் நெய்மாரும் உள்ளார். நெய்மாரும், மெஸ்சியும் ஒரே க்ளப்காக ஆட உள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா Under 19 அணியின் கேப்டன் ஆனார் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே.. சூர்யவம்சிக்கும் இடம்..!

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

விராட் கோலி இல்லாமல் விளையாடுவது அவமானகரமானது… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments