Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரபாவ் கால்பந்து : செல்சியை வீழ்த்தியது மான்செஸ்டர்!

Webdunia
திங்கள், 25 பிப்ரவரி 2019 (09:17 IST)
இங்கிலாந்து:  கிளப் அணிகளுக்கிடையே நடைபெறும் கால்பந்து தொடரான கரபாவ் கோப்பையின் இறுதிப்போட்டியில், செல்சியை  பெனால்டி ஷூட்டில் 4-3 என வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது மான்செஸ்டர் சிட்டி.


 
லண்டன் வெம்பிலி மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே  இந்த போட்டி நடைபெற்றது.
 
இரு அணிகளும் முழு பலத்துடன் களமிறங்கினாலும்  முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. 90 நிமிடங்கள் முடியும் போது, இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. அதைத்தொடர்ந்து போட்டி கூடுதல் நேரத்திற்கு சென்றது. இரு அணி வீரர்களும் தொடர்ந்து கோலடிக்க முயற்சி செய்தனர். ஆனால், கடைசிவரை கோல் கிடைக்கவில்லை. கூடுதல் நேரம் முடியும்போது, 0-0 என்று இருந்ததால், பெனால்டி ஷூட் மூலம் வெற்றியாளரை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. இதில் மான்செஸ்டர் சிட்டி 4-3 என வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் 2025: டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு.. கொல்கத்தாவிற்கு இன்னொரு வெற்றி கிடைக்குமா?

ஐபிஎல் போட்டிகளில் பேட்ஸ்மேன்களின் பேட் அளவை அளக்கும் நடுவர்கள்… காரணமென்ன?

விக்கெட் கீப்பிங்கில் இரட்டை சதம் அடித்த தோனி… புதிய சாதனை!

எனக்கு எதுக்கு ஆட்டநாயகன் விருது… அதுக்கு தகுதியானவர் அவர்தான் – தோனி ஓபன் டாக்!

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி.. பொறுமையை சோதித்த ஷிவம் துபே.. தோனி அதிரடியால் சிஎஸ்கே வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments