Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி பந்தில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி !

Webdunia
திங்கள், 25 பிப்ரவரி 2019 (04:46 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.
 
விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 126 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 50 ரன்களும், தோனி 29 ரன்களும், கேப்டன் கோஹ்லி 24 ரன்களும் எடுத்தனர்.
 
127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்க்ளில் 7 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியால் ஆஸ்திரேலியா 1-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது
 
கடைசி ஓவரில் 14 ரன்கள் ஆஸ்திரேலியா எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தபோது யாதவ் பந்துவீச்சில் கம்மின்ஸ் இரண்டு பவுண்டரிகள் உள்பட 14 ரன்கள் அடித்து அணிக்கு வெற்றி தேடி தந்தார்
 
மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்திய ஆஸ்திரேலிய பந்துவீச்சாலர் நைல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில போட்டிகள் நம் கூடவே இருக்கும்… அவற்றின் வெற்றி தோல்விகளுக்காக அல்ல… லார்ட்ஸ் போட்டி குறித்து பதிவிட்ட சிராஜ்!

3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

கற்றுக் கொடுப்பதை ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் நிறுத்தாது- ரிஷப் பண்ட் கருத்து!

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments