Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கரபாவ் கால்பந்து : செல்சியை வீழ்த்தியது மான்செஸ்டர்!

Advertiesment
Manchester City
, திங்கள், 25 பிப்ரவரி 2019 (09:17 IST)
இங்கிலாந்து:  கிளப் அணிகளுக்கிடையே நடைபெறும் கால்பந்து தொடரான கரபாவ் கோப்பையின் இறுதிப்போட்டியில், செல்சியை  பெனால்டி ஷூட்டில் 4-3 என வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது மான்செஸ்டர் சிட்டி.


 
லண்டன் வெம்பிலி மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே  இந்த போட்டி நடைபெற்றது.
 
இரு அணிகளும் முழு பலத்துடன் களமிறங்கினாலும்  முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. 90 நிமிடங்கள் முடியும் போது, இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. அதைத்தொடர்ந்து போட்டி கூடுதல் நேரத்திற்கு சென்றது. இரு அணி வீரர்களும் தொடர்ந்து கோலடிக்க முயற்சி செய்தனர். ஆனால், கடைசிவரை கோல் கிடைக்கவில்லை. கூடுதல் நேரம் முடியும்போது, 0-0 என்று இருந்ததால், பெனால்டி ஷூட் மூலம் வெற்றியாளரை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. இதில் மான்செஸ்டர் சிட்டி 4-3 என வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடைசி பந்தில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி !