Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சாம்பியன் பட்டம் வென்றது மதுரை அணி

Webdunia
திங்கள், 13 ஆகஸ்ட் 2018 (07:35 IST)
டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று சென்னையில் நடந்த இறுதி போட்டியில் மதுரை அணி திண்டுக்கல் அணியை 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 117 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஜெகதீசன் மட்டும் 51 ரன்கள் எடுத்தார். மதுரை அணி தரப்பில் தன்வார் 4 விக்கெட்டுக்களையும் லோகேஷ் ராஜ் 3 விக்கெட்டுக்களளயும் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
 
இந்த நிலையில் 118 ரன்கள் எடுத்தால் சாம்பியன் பட்டம் பெறலாம் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய மதுரை அணி, முதல் ஓவரிலேயே மூன்று விக்கெட்டுக்களை இழந்தது. இருப்பினும் அருண்கார்த்திக் மற்றும் சந்திரன் ஆகியோர்களின் பொறுப்பான ஆட்டத்தால் 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 119 ரன்கள் எடுத்து சாம்பியன் பட்டம் வென்றது. அருண்கார்த்திக் 75 ரன்களும் சந்திரன் 38 ரன்களும் எடுத்தனர். தொடர்நாயகன் மற்றும் ஆட்டநாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் அருண்கார்த்திக் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ் வென்ற இங்கிலாந்து.. இந்திய அணியில் தமிழக வீரர்.. ஆடும் லெவனில் யார் யார்?

ரோஹித், கோலி இல்லாவிட்டாலும் வெற்றி எளிதாக இருக்காது… பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ஐபிஎல் வெல்வதை விட இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வது முக்கியமானது- கேப்டன் கில்!

பெயர் மாறினாலும் பட்டோடிக்குக் கௌரவம்… இங்கிலாந்து தொடர் குறித்து சச்சின் கருத்து!

18 வருடங்களாக இங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்கு வெற்றி இல்லை.. இதுவரை 3 கேப்டன்களுக்கு மற்றுமே வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments