Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லங்கா பிரிமியர் லீக் தள்ளி போகிறதா? மலேசியாவுக்கு மாற்றப்படவுள்ளதாக தகவல்

Advertiesment
லங்கா பிரிமியர் லீக் தள்ளி போகிறதா? மலேசியாவுக்கு மாற்றப்படவுள்ளதாக தகவல்
, செவ்வாய், 3 நவம்பர் 2020 (13:06 IST)
லங்கா பிரிமியர் லீக் தள்ளி போகிறதா?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி போலவே கடந்த சில ஆண்டுகளாக இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் தொடர் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருவது தெரிந்ததே

 
இந்த ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடர் நவம்பர் 21ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாகவும் இது குறித்து அட்டவணையும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மேலும் ஐபிஎல் போட்டியில் விளையாடிய ஒரு சில வீரர்கள் லங்கா பிரீமியர் லீக்கில் விளையாடும் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில வீரர்கள் லங்கா பிரீமியர் லீக்கில் இருந்து விலகுவதாகவும் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது
 
இதனை அடுத்து லங்கா பிரிமியர் லீக் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இலங்கையில் இந்த தொடரை நடத்துவதில் சில சிக்கல்கள் இருப்பதால் இந்த போட்டியை ஐக்கிய அரபு எமிரேட் அல்லது மலேசியாவுக்கு மாற்றம் செய்ய லங்கா பிரிமியர் லீக் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளதாகவும், இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாட்மிண்ட்டன் வீராங்கை பி வி சிந்து ஓய்வா ? அறிவிப்பால் அதிர்ச்சியான ரசிகர்கள்!