Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மெரினாவில் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு.. குடும்பத்துடன் வருமாறு வேண்டுகோள்..!

Siva
ஞாயிறு, 9 மார்ச் 2025 (08:14 IST)
சென்னை மெரினாவில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியை நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னையின் இரண்டு இடங்களில் இந்த போட்டியை திரையிட உள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் விவேகானந்தா மாளிகைக்கு எதிரிலும், பெசன்ட் நகர் கடற்கரையில் போலீஸ் பூத் அருகிலும் திரையிடப்படுகிறது.

இந்த நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது குடும்பத்துடன் போட்டியை கண்டு ரசிக்குமாறு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. ஏற்கனவே லீக் போட்டிகளின் போது இந்தியா - பாகிஸ்தான் போட்டி மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் திரையிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், இன்று இறுதிப் போட்டி என்பதால் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் குவிந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறுதிப் போட்டியில் இரு அணியிலுமே மாற்றம் இருக்கும்… ரவி சாஸ்திரி கணிப்பு!

RCB அணியில் ஆட விரும்புகிறேன் – பாகிஸ்தான் வீரர் ஓபன் டாக்!

ஐபிஎல் தொடரிலாவது விளையாடுவாரா பும்ரா?... ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

சிஎஸ்கே வில் தோனி இருக்கும் வரை ஆர்சிபியால் கோப்பை வெல்ல முடியாது… பாக் வீரர் கருத்து!

ரோஹித் ஷர்மா 30 ரன்களில் திருப்தி அடைந்துவிடுகிறார்… கவாஸ்கர் குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments