Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மெரினாவில் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு.. குடும்பத்துடன் வருமாறு வேண்டுகோள்..!

Siva
ஞாயிறு, 9 மார்ச் 2025 (08:14 IST)
சென்னை மெரினாவில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியை நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னையின் இரண்டு இடங்களில் இந்த போட்டியை திரையிட உள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் விவேகானந்தா மாளிகைக்கு எதிரிலும், பெசன்ட் நகர் கடற்கரையில் போலீஸ் பூத் அருகிலும் திரையிடப்படுகிறது.

இந்த நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது குடும்பத்துடன் போட்டியை கண்டு ரசிக்குமாறு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. ஏற்கனவே லீக் போட்டிகளின் போது இந்தியா - பாகிஸ்தான் போட்டி மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் திரையிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், இன்று இறுதிப் போட்டி என்பதால் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் குவிந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனி வந்தா கழட்டுவாருன்னு சொன்னீங்க.. இந்த ப்ளேயரை இறக்குங்க! அடிக்கலைன்னா என் வீடு உங்களுக்கு! - CSK ரசிகர் சவால்!

6 பந்துகளில் 6 சிக்ஸர்.. ஐபிஎல்-ல் சாதனை சதம்… ‘யாரு சாமி இந்த பையன்?’ என வியக்கவைக்கும் பிரயான்ஷ் ஆர்யா!

சாஹலுக்கு ஏன் ஒரு ஓவர் மட்டும் கொடுத்தேன்?- கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அளித்த பதில்!

கான்வேவை வெளியேற்றிய சிஎஸ்கே அணி… இதெல்லாம் ‘wrong bro’ எனக் கொந்தளிக்கும் கிரிக்கெட் ஆர்வலர்கள்!

ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்யும் சி எஸ் கே… தோனி முன்னாடி வந்தும் ‘எந்த பயனும் இல்ல’!

அடுத்த கட்டுரையில்
Show comments