Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மெரினாவில் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு.. குடும்பத்துடன் வருமாறு வேண்டுகோள்..!

Siva
ஞாயிறு, 9 மார்ச் 2025 (08:14 IST)
சென்னை மெரினாவில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியை நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னையின் இரண்டு இடங்களில் இந்த போட்டியை திரையிட உள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் விவேகானந்தா மாளிகைக்கு எதிரிலும், பெசன்ட் நகர் கடற்கரையில் போலீஸ் பூத் அருகிலும் திரையிடப்படுகிறது.

இந்த நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது குடும்பத்துடன் போட்டியை கண்டு ரசிக்குமாறு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. ஏற்கனவே லீக் போட்டிகளின் போது இந்தியா - பாகிஸ்தான் போட்டி மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் திரையிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், இன்று இறுதிப் போட்டி என்பதால் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் குவிந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்.. 4 மாதங்களுக்கு முன்பே விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுக்கள்..!

தயவு செய்து பல்டி அடிக்காதீர்கள்… டெஸ்ட் வேற, டி 20 வேற – பண்ட்டுக்கு அஸ்வின் அட்வைஸ்!

ஐசிசி தரவரிசையில் இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் & பண்ட் முன்னேற்றம்…!

சூர்யகுமார் யாதவ்வுக்கு ‘ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா’ அறுவை சிகிச்சை…!

கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிற்கு அரசு பதவி.. முதல்வர் யோகி கொடுத்த கெளரவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments