Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கல் உடைக்கும் தொழிலாளி பலியான வழக்கு: திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டி விடுதலை ரத்து..!

Advertiesment
highcourt

Mahendran

, வெள்ளி, 7 மார்ச் 2025 (17:21 IST)
கல் உடைக்கும் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி பலியானது தொடர்பான வழக்கில், திமுக எம்.எல்.ஏ பழனியாண்டிக்கு வழங்கப்பட்ட விடுதலையை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
மேலும், இந்த வழக்கை மீண்டும் சட்டப்படி விசாரணை செய்து தீர்ப்பளிக்க கரூர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், இந்த விவகாரம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கரூர் அருகே உள்ள கல் உடைக்கும் ஆலையில் திடீரென ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
இந்த வழக்கை விசாரித்த கரூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம், எம்.எல்.ஏ பழனியாண்டியை விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தற்போது அவரது விடுதலை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சந்தானபாரதி புகைப்படம் இடம்பெற்றிருந்தது திமுகவின் வேலை: அண்ணாமலை