Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐபிஎல் ஏலத்தில் இருந்து விலகிய நியுசிலாந்து ஆல்ரவுண்டர்!

ஐபிஎல் ஏலத்தில் இருந்து விலகிய நியுசிலாந்து ஆல்ரவுண்டர்!
, வியாழன், 3 பிப்ரவரி 2022 (16:14 IST)
நியுசிலாந்து ஆல்ரவுண்டர் கைல் ஜேமிசன் ஏலத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

நியுசிலாந்து அணியின் இளம் ஆல்ரவுண்டர் கைல் ஜெமிசன் பெங்களூர் அணிக்காக கடந்த ஆண்டு ஏலத்தில் 16 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டார். ஆனால் அவரின் பங்களிப்பு எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் பாதி போட்டிகளில் உட்கார வைக்கப்பட்டார். இதனால் இந்த ஆண்டு ஏலத்தில் அவரைக் கழட்டிவிடப்பட்டார்.

இந்நிலையில் இந்த ஆண்டு ஏலத்தில் அவர் கலந்துகொள்ள இருந்த நிலையில் இப்போது தான் 2022 தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பயோபபுள் போன்ற மன அழுத்தம் தரும் சூழலில் தொடர்ந்து இருந்து வருவதாலும், இன்னும் ஒரு வருடத்துக்கு நிறைய சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளதாலும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் நோக்கத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

U19 உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா இறுதிக்கு தகுதி!