Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

க்ருனாள் பாண்ட்யா என்னென்ன பொருட்களை கொண்டுவந்தார் ? எவ்வளவு அபராதம்?– வெளியானது தகவல்!

க்ருனாள் பாண்ட்யா என்னென்ன பொருட்களை கொண்டுவந்தார் ? எவ்வளவு அபராதம்?– வெளியானது தகவல்!
, வெள்ளி, 13 நவம்பர் 2020 (11:28 IST)
மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் குருனாள் பாண்ட்யா துபாயில் இருந்து கொண்டு வந்த பொருட்கள் பற்றிய் தகவல் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் வெற்றி பெற்ற மும்பை அணி வீரர்கள் அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு திரும்பியுள்ளனர். அதில் இடம்பெற்றிருந்த க்ருனாள் பாண்ட்யா விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அதற்குக் காரணம் அவர் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக தங்க நகைகளை அங்கிருந்து கொண்டு வந்ததுதான் என சொல்லப்படுகிறது.

அதில் இரண்டு ரோலக்ஸ் வாட்சுகள், ஆடிமார் பீகட் வாட்ச்சுகள் மற்றும் அளவுக்கதிமான தங்கங்கள் ஆகியவை இருந்ததாக சொல்லப்படுகிறது. அவற்றின் மொத்த மதிப்பு 75 லட்சம் ரூபாய் என சொல்லப்படுகிறது. இந்த பொருட்களை எல்லாம் அவர்கள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து பாண்ட்யாவுக்கு நோட்டிஸ் அனுப்பப்படும் எனவும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பில் 60 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒட்டுமொத்த ஏலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஐபிஎல் அணிகள்!