Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாஸ் வென்ற கொல்கத்தா! பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லுமா?

Advertiesment
பஞ்சாப்
, வெள்ளி, 3 மே 2019 (19:38 IST)
இன்று நடைபெறும் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் நான்காவது அணியாக மாற ஒரு வாய்ப்பு உள்ளது. அதேபோல் இன்று தோல்வி அடையும் அணி அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற இன்றைய போட்டியில் எந்த அணி வென்றாலும் அந்த அணி இன்னொரு போட்டியிலும் கட்டாயம் வெல்ல வேண்டும் என்பதும், ஐதராபாத் அணி இன்னொரு போட்டியில் தோல்வி அடைய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இன்றைய பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல், கிறிஸ் கெயில், மயாங்க் அகர்வால், பூரன், பிராப்சிம்ரன் சிங், சாம் கர்ரன், அஸ்வின், எம்.அஸ்வின், ஆண்ட்ரூ டை, முகமது ஷமி, அர்ஷ்தீப்சிங் ஆகியோர் உள்ளனர்.
 
அதேபோல் இன்றைய கொல்கத்தா அணியில் கிரிஸ் லின், கில், உத்தப்பா, நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக், ரஸல், ரிங்கு சிங், சுனில் நரேன், பியூஷ் சாவ்லா, ஹாரி கர்னே மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோர் உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்ரிடி செய்த பித்தலாட்டம் – சுயசரிதை புத்தகத்தால் சர்ச்சை !