Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல் கிரிக்கெட்: ஷாருக்கானின் கொல்கத்தா அணி வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்: ஷாருக்கானின் கொல்கத்தா அணி வெற்றி
, வியாழன், 18 மே 2017 (04:05 IST)
நேற்றைய பிளே ஆஃப் போட்டியில் வருணபகவான் புண்ணியத்தில் சன்ரைசஸ் அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிர்ஷ்டம் அந்த அணியின் பக்கம் இல்லாததால் இரவு 1 மணி அளவில் மீண்டும் ஆட்டம் தொடங்கியது.



 


ஐதரபாத் அணி 128 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கொல்கத்தாவுக்கு டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 6 ஓவர்களில் 48 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு அளிக்கப்பட்டது.

இந்த இலக்கை ஷாருக்கானின் கொல்கத்தா அணி 5.2 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து எடுத்துவிட்டதால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. எனவே நாளை இதே பெங்களூரு மைதானத்தில் கொல்கத்தா மும்பை அணியுடன் மோதும். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் புனே அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வர்ணபகவான் கருணையால் வெற்றி வாகை சூடுகிறதா சன்ரைசஸ்