Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஸ்மித்தை நெருங்கிய கோஹ்லி – இரட்டைசதத்தால் 37 புள்ளிகள் பெற்று புலிப்பாய்ச்சல் !

Webdunia
செவ்வாய், 15 அக்டோபர் 2019 (08:19 IST)
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இரட்டைசதம் அடித்த இந்திய கேப்டன் கோஹ்லி 37 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கும் ஸ்மித்தை நெருங்கியுள்ளார்.

கடந்த ஒரு வருடகாலமாக ஸ்மித் டெஸ்ட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் கோஹ்லி தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தார். இந்தாண்டு அவருக்கான தடை நீக்கப்பட்டு ஆஷஸ் தொடரில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி 700க்கும் மேற்பட்ட ரன்களை சேர்த்ததன் மூலம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார். கடந்த 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் சதமடிக்காத  கோலி 899 புள்ளிகளோடு இரண்டாம் இடத்துக்கு சென்றார். ஸ்மித் 937 புள்ளிகளோடு முதலிடத்தில் இருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் அடித்ததன் மூலம் கோஹ்லி ஒரேப் போட்டியில் 37 புள்ளிகள் பெற்று 936 புள்ளிகளோடு ஸ்மித்தை நெருங்கியுள்ளார். மூன்றாவது போட்டியில் கோலி சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அவர் ஸ்மித்தை முந்தி முதலிடம் பிடிப்பார்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments