Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி போட்டி: அரையிறுதிக்கு தகுதி பெற்ற இரு அணிகள்

Webdunia
திங்கள், 14 அக்டோபர் 2019 (22:44 IST)
புரோ கபடி போட்டி தொடர் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி வந்துள்ள நிலையில் இன்று நடைபெற்ற இரண்டு எலிமினாட்டர் போட்டிகளில் பெங்களூரு மற்றும் மும்பை ஆகிய இரு அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர் 
 
ஏற்கனவே புள்ளிகள் அடிப்படையில் டெல்லி மற்றும் பெங்கால் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இன்று பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் தகுதி பெற்றுள்ளன 
 
இன்றைய முதல் போட்டியில் உத்திரப்பிரதேசம் மற்றும் பெங்களூரு அணி மோதிய நிலையில் பெங்களூர் அணி 48 புள்ளிகளும் உபி  அணி 45 புள்ளிகளும் பெற்றதால் பெங்களூர் அணி 3 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 
 
அதேபோல் இன்று நடைபெற்ற இன்னொரு எலிமினேட்டர் போட்டியில் மும்பை மற்றும் அரியானா அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை அணி 46 புள்ளிகளும் ஹரியானா அணி 38 புள்ளிகளும் எடுத்ததை அடுத்து 8 புள்ளிகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது
 
இந்த நிலையில் நாளை மறுநாள் நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதும். அதேநாளில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பெங்கால் மற்றும் மும்பை அணிகள் மோதும் என்பது குறிப்பிடதக்கது. இறுதிப்போட்டியில் வரும் சனிக்கிழமை நடைபெறும்

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments