Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி போட்டி: அரையிறுதிக்கு தகுதி பெற்ற இரு அணிகள்

Webdunia
திங்கள், 14 அக்டோபர் 2019 (22:44 IST)
புரோ கபடி போட்டி தொடர் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி வந்துள்ள நிலையில் இன்று நடைபெற்ற இரண்டு எலிமினாட்டர் போட்டிகளில் பெங்களூரு மற்றும் மும்பை ஆகிய இரு அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர் 
 
ஏற்கனவே புள்ளிகள் அடிப்படையில் டெல்லி மற்றும் பெங்கால் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இன்று பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் தகுதி பெற்றுள்ளன 
 
இன்றைய முதல் போட்டியில் உத்திரப்பிரதேசம் மற்றும் பெங்களூரு அணி மோதிய நிலையில் பெங்களூர் அணி 48 புள்ளிகளும் உபி  அணி 45 புள்ளிகளும் பெற்றதால் பெங்களூர் அணி 3 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 
 
அதேபோல் இன்று நடைபெற்ற இன்னொரு எலிமினேட்டர் போட்டியில் மும்பை மற்றும் அரியானா அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை அணி 46 புள்ளிகளும் ஹரியானா அணி 38 புள்ளிகளும் எடுத்ததை அடுத்து 8 புள்ளிகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது
 
இந்த நிலையில் நாளை மறுநாள் நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதும். அதேநாளில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பெங்கால் மற்றும் மும்பை அணிகள் மோதும் என்பது குறிப்பிடதக்கது. இறுதிப்போட்டியில் வரும் சனிக்கிழமை நடைபெறும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் செய்த சாதனை.. சச்சின், டிராவிட், சேவாக் பட்டியலில் இடம்..!

‘ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமா’ எனக் கேட்ட பும்ரா – சஞ்சனாவின் ‘தக்’ பதில்!

சிராஜ் அபார பவுலிங்… முதல் இன்னிங்ஸில் இந்தியா 180 ரன்கள் முன்னிலை!

பாகிஸ்தானை அடுத்து இனி வங்கதேசத்திற்கும் இந்திய கிரிக்கெட் அணி செல்லாதா? பரபரப்பு தகவல்..!

5 விக்கெட்டுக்களை இழந்தாலும் ஸ்மித், புரூக் அபார ஆட்டம்.. இங்கிலாந்து ஸ்கோர் விபரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments