Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதலில் சதம் அடித்துவிட்டு பேசு… படிகல்லுக்கு கோலியின் அட்வைஸ்!

முதலில் சதம் அடித்துவிட்டு பேசு… படிகல்லுக்கு கோலியின் அட்வைஸ்!
, வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (13:16 IST)
ஆர் சி பி அணியின் பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல் நேற்றைய போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி சதமடித்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விக்கெட் இழப்பின்றி 178 ரன்கள் இலக்கை துரத்தி வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் அந்த அணியின் 20 வயது தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் 51 பந்துகளில் சதமடித்து அசத்தினார். அதில் 11 பவுண்டரிகளும் 6 சிக்ஸர்களும் அடக்கம். இதன் மூலமாக இந்திய அணிக்காக விளையாடுவதற்கு முன்பே சதமடித்த மூன்றாவது இந்திய வீரராக சாதனைப் படைத்துள்ளார் படிக்கல்.

இந்நிலையில் போட்டி முடிந்த பின்னர் பேசிய கோலி ‘ எல்லா நாளும் நானே ஆதிக்கம் செலுத்த வேண்டும் என எதிர்பார்க்க மாட்டேன். எதிர்முணைஇல் இருக்கும் வீரர் சிறப்பாக விளையாடினால் என் வேலை ஸ்ட்ரைக்கை மாற்றுவதுதான். கடைசில் எனக்கான பந்துகள் கிடைத்த போது நல்ல ஷாட்களாக ஆடினேன். ஒரு கட்டத்தில் படிக்கல் நான் சதமடிப்பது முக்கியமில்லை. எப்போது வேண்டுமானாலும் சதம் அடிக்கும் வாய்ப்புக் கிடைக்கும். போட்டியை முடியுங்கள எனக் கூறினார். அவரிடம் நான் ‘அதை முதல் சதத்தை அடித்துவிட்டுக் கூறு’ என நான் கூறினேன். அவரின் இன்னிங்ஸ் மிகச் சிறப்பான ஒன்று.’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் தொடரில் இருந்து நடராஜன் விலகல்… அதிர்ச்சி தகவல்!