Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாவது போட்டியில் மாற்றங்கள் இருக்கும் – கோஹ்லி அறிவிப்பு !

Webdunia
திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (13:42 IST)
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி 20 தொடரை இந்திய அணி வென்றுள்ள நிலையில் மூன்றாவது போட்டியில் பல மாற்றங்கள் இருக்கும் என அணித் தலைவர் கோலி தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி 20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இதில் அறிமுக வீரராகக் களமிறங்கிய பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி , கலீல் அகமது, குருனாள் பாண்ட்யா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பண்ட் மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோர் சொதப்பியுள்ளனர்.

தொடரை வென்றுள்ள நிலையில் அடுத்த போட்டியில் இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும் எனவும் காத்திருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் கோஹ்லி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பண்ட் மற்றும் மனிஷ் பாண்டேவுக்குப் பதில் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் களமிறக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. மேலும் ராகுல் சாஹர், தீபக் சாஹர் ஆகியோருக்கு அடுத்த போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments