423 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இங்கிலாந்து; கோஹ்லி, புஜாரா டக் அவுட்

Webdunia
திங்கள், 10 செப்டம்பர் 2018 (22:44 IST)
இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

 
இந்திய - இங்கிலாந்து அணிகள் இடையேயான 5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில்  8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
 
இதைத்தொடர்ந்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. 464 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர் தவான் 1 ரன்களில் வெளியேறினார். 
 
அதைத்தொடர்ந்து புஜாரா, கோஹ்லி டக் அவுட் ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய அணி இன்றைய நாள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் குவித்துள்ளது.
 
நாளை போட்டியின் கடைசி நாள் என்பதால் இந்திய அணி  பெரும்பாலும் அனைத்து விக்கெட்டுகளையும் இழக்காமல் டிரா செய்யவே போராட வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனி அப்பவே எனக்கு அட்வைஸ் பண்ணார்… மனம்திறந்த முகமது சிராஜ்!

அவர் ஏன் அணியில் இருக்கிறார் என்று தெரியவில்லை… இளம் வீரர் குறித்து ஸ்ரீகாந்த் காட்டம்!

கோலி & ரோஹித்துக்கு சிறப்பான ‘send off’ கொடுக்க விரும்புகிறோம்… ஆஸி கிரிக்கெட் வாரிய அதிகாரி!

குகேஷின் ராஜாவை எடுத்து கூட்டத்தில் வீசிய நாகமுரா! - செஸ் போட்டியில் அதிர்ச்சி!

இந்தியா-பாக். மகளிர் உலக கோப்பை: 88 ரன்கள் அபார வெற்றி; பரபரப்புக்கு பஞ்சமில்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments