Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித்தை முந்திய கோலி – வரிசையாக நான்காவது ஆண்டாக சாதனை !

Webdunia
திங்கள், 23 டிசம்பர் 2019 (10:18 IST)
2019 ஆம் ஆண்டு சர்வதேசக் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை நான்காவது முறையாக விராட் கோலி நிகழ்த்தியுள்ளார்.

இந்திய அணி நேற்று மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான போட்டியை  வெற்றியோடு முடித்த நிலையில் இதோடு இந்த ஆண்டுக்கான போட்டிகளை முடித்துள்ளது. இந்நிலையில் நேற்று கோலி அடித்த 85 ரன்களின் மூலம் இந்தாண்டில் அவர் சர்வதேசப் போட்டிகளில் 2443 ரன்கள் சேர்த்துள்ளார். இதன் மூலம் இந்தாண்டில் சர்வதேசப் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்த சாதனையை வரிசையாக அவர் 2016 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளாக நிகழ்த்தி வருகிறார். கோலிக்கு அடுத்த இடத்தில் இந்திய அணியின் மற்றொரு வீரரான ரோஹித் ஷர்மாவும் மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானின் பாபர் ஆஸாமும் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குஜராத் பந்துவீச்சை துவம்சம் செய்த மும்பை.. 229 ரன்கள் இலக்கு..!

’அந்த வார்த்தையை சொல்லக் கூடாது என கோலி அன்புக்கட்டளை இட்டுள்ளார்’ –ABD பகிர்ந்த தகவல்!

இதுதான்யா டீமு. 15 ஆட்டங்களில் 9 வீரர்கள் ஆட்டநாயகன் விருது… மாஸ் காட்டிய RCB!

ஆட்டநாயகன் விருதை நான் இப்போது கொண்டாடப் போவதில்லை… சுயாஷ் ஷர்மா பதில்!

கோலியின் அந்த சிரிப்பு.. இன்னும் ஒரு ஆட்டம்தான் செல்லங்களா! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments