Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யார் சிறந்தவர் சச்சினா ? கோலியா ? – முன்னாள் வீரர் கருத்து !

Webdunia
திங்கள், 23 டிசம்பர் 2019 (08:26 IST)
இந்திய அணியின் ஜாம்பவான் பேட்ஸ்மேன்களான சச்சின் மற்றும் கோலி இருவரில் யார் சிறந்தவர் என்ற கேள்விக்கு இயன் சேப்பல் பதிலளித்துள்ளார்.

வெவ்வேறு காலகட்டங்களில் இந்திய பேட்டிங்கில் கோலோச்சிய சச்சின், கங்குலி மற்றும் கோலி, ரோஹித் ஆகியோரில் யார் சிறந்தவர்கள் என்பது குறித்து விவாதம் எழுந்துள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான இயான் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அதில் ‘ சச்சினும், கங்குலியும் தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த போது மிகச்சிறந்த பவுலர்களை எதிர்கொண்டனர். அவர்கள் காலத்தில் ஒவ்வொரு அணியும் தலை சிறந்த இரு பவுலர்களைக் கொண்டிருந்தது. அதுபோல தரமான பவுலர்களை ரோஹித்தும், கோலியும் சந்தித்து இருப்பார்களா?. ஒருவரின் எதிராளியை வைத்தே அவரை மதிப்பிடலாம். அதை வைத்து மதிப்பிடும் போது சச்சின் கங்குலி இருவரும் யார் யாரை எதிர்கொண்டுள்ளார்கள் என்பதே அவர்கள் யார் என்பதற்கு சான்று. புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் கோலி சிறந்த பேட்ஸ்மேன் தான் ‘ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments