Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாங்கள் நியுசிலாந்தில் 3 நாட்களில் தோற்றபோது யாருமே பேசவில்லை… கோலி ஆதங்கம்!

நாங்கள் நியுசிலாந்தில் 3 நாட்களில் தோற்றபோது யாருமே பேசவில்லை… கோலி ஆதங்கம்!
, புதன், 3 மார்ச் 2021 (16:11 IST)
இந்திய அணியின் கேப்டன் கோலி அகமதாபாத் மைதானம் மீது எழும் விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடந்தது. அந்த போட்டி இரண்டே நாட்களில் முடிந்து இந்தியா அபார வெற்றி பெற்றது. இதையடுத்து மைதானத்தின் மீதும் பிசிசிஐ மீதும் விமர்சனங்கள் எழுந்தன. மைதானம் இந்திய சுழல்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைக்கப்பட்டது என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் உள்ளிட்டோர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் கேப்டன் கோலி ‘ நியூசிலாந்தில் நடைபெற்ற போட்டியில் மூன்று நாள்களுக்குள் நாங்கள் தோற்றோம். அப்போது ஆடுகளத்தைப் பற்றி யாரும் பேசவில்லை. நாங்கள் திறமையில் கவனம் செலுத்துகிறோம், ஆடுகளத்தின் தன்மை குறித்து அல்ல. -வது டெஸ்டில் இரு அணிகளின் பேட்ஸ்மேன்களும் சுழற்பந்துவீச்சை சரியாக விளையாடவில்லை.’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி… நான்காவது போட்டியில் தோற்றாலும் இந்தியாவுக்கு வாய்ப்பு – எப்படி தெரியுமா?