Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே.எல்.ராகுல் அசத்தல் சதம்: வலுவான ஸ்கோர் எடுத்த இந்தியா!

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (07:15 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வலுவான ஸ்கோர் எடுத்துள்ளது
 
நேற்று தொடங்கிய போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்றதை அடுத்து பந்து வீச தீர்மானம் செய்தது. இதனை அடுத்து களத்தில் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவருமே அபாரமாக விளையாடினார்
 
ரோகித் சர்மா 83 ரன்களில் அவுட்டான போதிலும் கேஎல் ராகுல் சதம் அடித்து இன்னும் களத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 12 பவுண்டரிகளுடன் 127 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு துணையாக கேப்டன் விராட் கோலி 42 ரன்கள் எடுத்துள்ளார் 
 
இந்த நிலையில் நேற்று முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 276 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் இருந்தபோது திடீரென மழை வந்து வெற்றியை பறித்த நிலையில் 2வது டெஸ்ட் போட்டியில் வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

தோனியிடம் அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை… முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments