Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் அணி சஸ்பெண்ட் ஆகுமா ? – நெஸ் வாடியா கைதால் சிக்கல் !

Webdunia
புதன், 1 மே 2019 (21:15 IST)
ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வரும் பஞ்சாப் அணி அதன் உரிமையாளர் கைதால் சஸ்பெண்ட் செய்யப்படலாம் என்ற அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது.

முகமது அலி ஜின்னாவின் கொள்ளுப் பேரனான நெஸ் வாடியா கடந்த மாதம் ஜப்பானின் ஹொக்காய்டோ தீவுக்குச் சென்றிருந்தார். அப்போது அவரிடம் இருந்து 25 கிராம் கஞ்சா ஜப்பான் போலிஸாரால் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை கொண்டு வந்ததாக அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இப்போது சப்போரோநீதிமன்றம் அவருக்கு  2 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. நெஸ் வாடியா கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் விதிமுறைகளின் படி அணியின் உரிமையாளர்கள் அல்லது நிர்வாகிகள் யாராவது அணி அல்லது ஐபிஎல் நிர்வாகத்திற்கு களங்கம் விளைவிக்கும் விதமாக நடந்துகொண்டால் அணியை சஸ்பெண்ட் செய்ய பிசிசிஐ க்கு அதிகாரம் உண்டு. இந்த விதிகளின் படியே சிஎஸ்கே அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன் சூதாட்டப் புகாரில் சிக்கியபோது சென்னை அணி 2 ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது.

அதனால் பஞ்சாப் அணிக்கும் அதே விதமான தண்டனைக் கிடைக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான விசாரணையை பிசிசிஐ குறைதீர்ப்பு அதிகாரி விரைவில் ஆரம்பிப்பார் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments