Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியின் கண் அசைவில் விக்கெட் விழும்: கேதர் ஜாதவ் நெகிழ்ச்சி!!

Webdunia
சனி, 17 ஜூன் 2017 (12:19 IST)
வங்கதேச அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில், தோனியின் கண் அசைவுக்கு ஏற்ப பவுலிங் செய்தேன் என இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ் தெரிவித்துள்ளார்.


 
 
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இந்த தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. நாளை இந்தியா பாகிஸ்தான் மோதும் இறுதி போட்டி நடைபெறவுள்ளது.
 
வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் கேதர் ஜாதவ், திடீர் ஹீரோவாக உருவெடுத்தார். ஆனால் இதற்கு காரணம் தோனி தான் என தெரிவித்துள்ளார். 
 
ஜாதவ் கூறுகையில், துவக்கத்தில் என்னுடைய பவுலிங்கை பேட்ஸ்மேன் கணிக்க துவங்கினார். இதை கவனித்த தோனி, என்னிடம் வந்து எந்த லைனில் பவுலிங் செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினார். 
 
அதன் பின்னர் பேட்ஸ்மேனுக்கு பின்னால் இருந்து தனது கண்களால் சைகை காட்டினார். தோனியின் கண் அசைவில் தான் எனக்கு விக்கெட்கள் விழுந்தது. அவரின் அனுபவம் மிகவும் விலை மதிப்பு இல்லாதது என தெரிவித்துள்ளார்.

நிக்கோலஸ் பூரன் பேயாட்டம்… மும்பை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த லக்னோ!

MIvsLSG: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments