Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“அஷ்வினை உட்காரவைத்தால் கோலியையும் உட்காரவைக்க வேண்டும்”… முன்னாள் கேப்டன் கபில்தேவ் கருத்து!

Webdunia
சனி, 9 ஜூலை 2022 (10:22 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாக மிக மோசமான ஃபார்மில் இருக்கிறார்.

இதனால் அவர் மீதான விமர்சனங்கள் அதிகளவில் எழுந்துள்ளன. பலரும்  விராட் கோலி தன்னுடைய உச்சத்தை கடந்துவிட்டார். அவரால் இனிமேல் மீண்டும் பழைய கோலியாக விளையாட முடியாது எனக் கூறி வருகின்றனர். இதையடுத்து தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கோலியை ஆடும் லெவனில் வைக்காமல் பென்ச்சில் உட்காரவைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் சமீபத்தில் தெரிவித்த கருத்தில் “சமீபத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் உலகின் நம்பர் 2 டெஸ்ட் பவுலரை உட்காரவைத்துள்ளார்கள். அப்படி என்றால் ஒரு காலத்தில் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருந்தவரையும் உட்காரவைக்க வேண்டும்.  ப்ளேயிங் லெவன் என்பது தற்போதைய செயல்திறனை வைத்து அமையவேண்டும். வீரர்களின் கடந்தகால சாதனைகளை வைத்தல்ல. நம்மிடம் திறமையான பல இளம் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களை நாம் வெளியில் அமரவைப்பது நல்லதல்ல.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கருப்பு நிற உடையில் கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த ஹன்சிகா!

கல்கி படத்தில் சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் ஐந்து பிரபல நடிகர்கள்!

நாங்க சொதப்புனதே இந்த இடத்தில்தான்… கம்பேக் கொடுப்போம்- ரஷீத் கான் நம்பிக்கை!

குளம் போல காட்சியளிக்கும் கயானா மைதானம்… போட்டி நடந்தா மாதிரிதான்!

வரலாற்றில் இன்று… முதல் முதலாக ஐசிசி தொடரின் இறுதிப் போட்டிக்கு சென்ற தென்னாப்பிரிககா!

அடுத்த கட்டுரையில்
Show comments