Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டி: தங்கம் வென்ற இந்திய வீராங்கனைகள்

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2017 (22:00 IST)
டெல்லியில் கடந்த சில நாட்களாக உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் உலகெங்கிலும் இருந்து பல நாட்டு துப்பாக்கி சுடும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு வந்தனர்.

இந்நிலையில் 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ஜீது ராய், ஹீனா சித்து ஆகியோர் அடங்கிய இந்திய அணி, தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.




இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் ஜப்பான், சீனத் தைபே ஆகிய அணி வீராங்கனைகளின் சவாலை முறியடித்து இந்திய அணி தங்கம் வென்றது. இந்தப் போட்டியில் ஜப்பான் அணி வெள்ளிப் பதக்கத்தையும், சீனத் தைபே அணி வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.

ஏற்கனவே உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா சார்பில் பூஜா கட்கார், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலம் வென்றிருந்த நிலையில் தற்போது இந்திய அணி இரண்டாவது தங்கப்பதக்கத்தை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது.

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments