போக்கிமோன் கோ விளையாடியதால், ஜப்பானை சேந்த பிரபல ஒலிம்பிக் வீரருக்கு 3.3 லட்சம் ரூபாய் மொபைல் பில் வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒலிம்பிக் கொஹேய் உசுமுரா [27] பிரேசில் சென்றுள்ளார். அங்கு சென்ற பின்னரும் தன்னுடைய ஜப்பான் சிம்மை தொடர்ந்து பயன்படுத்தியுள்ளார்.
அப்போது இவர் தனது மொபைல் போனில் அவ்வப்போது போக்கிமோன் கோ விளையாட்டை விளையாடி வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு கடந்த மாதம் மொபைல் பில்லை, ஜப்பான் மொபைல் நிறுவனம் அவருக்கு அனுப்பியது.
அதில், கடந்த மாதம் மட்டும் செலுத்த வேண்டிய பில் 3700 பவுண்ட் (இந்திய மதிப்பில் 3 லட்சத்து 30 ஆயிரம்) என கூறப்பட்டிருந்தது. இதை அறிந்த யுசிமுரா அதிர்ச்சியடைந்து உள்ளார்.
கொஹேய் உசுமுரா கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.