Publish Date: Fri, 26 Mar 2021 (07:54 IST)
Updated Date: Fri, 26 Mar 2021 (08:06 IST)
டோக்கியோவில் ஜூன் மாதம் நடக்க உள்ள ஒலிம்பிக் தொடருக்கான தீபத்தொடர் ஓட்டம் தொடங்கியுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டு இந்த ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை உள்ளது. இந்நிலையில் இதையடுத்து ஒலிம்பிக் தொடருக்கான தீபத் தொடர் ஓட்டம் ஜப்பானின் புஷிகுமா பகுதியில் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 47 மாகாணங்களுக்கு மொத்தம் 121 நாட்கள் இந்தத் தீபம் பயணிக்கிறது. கொரோனா காரணமாக விமரிசையாகக் கொண்டாடப்படும் தீப ஓட்ட தொடர் இந்த ஆண்டு எளிமையாக தொடங்கியுள்ளது.