Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனது வாழ்க்கையை படமெடுத்தால் கவுரவமே - சானியா மிர்ஸா

Webdunia
புதன், 20 ஜூலை 2016 (05:48 IST)
எனது வாழ்க்கை வரலாறு குறித்த படம் எடுக்கப்பட்டால் அதனை எனக்கு கிடைத்த கவுரவமாக கருதுவேன் என்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா அதிரடியாக தெரிவித்துள்ளார்.
 

 
நீண்ட நாட்களாக மகளிர் இரட்டையர் போட்டிகளில், சர்வதேச தரவரிசை பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளவர் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா. இவர், Ace against Odds எனும் சுயசரிதை நூலினை எழுதியுள்ளார். அந்த நூலினை சல்மான் கான் வெளியிட்டார்.
 
அப்போது சானியா மிர்ஸா பேசுகையில், ”என்னால் சினிமாவில் நிச்சயம் நடிக்க முடியும். இந்த நம்பிக்கை தனக்கு நீண்ட நாட்களாகவே இருந்துள்ளது. ஆனால், தற்போதைக்கு அப்படியான எண்ணம் எதுவும் இல்லை” என தெரிவித்துள்ளார்.
 
மேலும் அவர் கூறுகையில், ’எனது வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் எடுக்கப்படுமா? என்பது எனக்கு தெரியாது. அப்படி எடுக்கப்பட்டால் அதனை எனக்கு கிடைத்த கவுரவமாக கருதுவேன்.
 
சினிமா தயாரிப்பாளர் பராக் கான் எனக்கு நல்ல நண்பர். அவர் என்னை வைத்து படம் எடுக்க இருப்பதாக வெளியான செய்தியில் உண்மை எதுவும் கிடையாது. எனது கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே, அனுஷ்கா சர்மா, ப்ரீணி சோப்ரா நடித்தால் சிறப்பாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

அடுத்த கட்டுரையில்
Show comments