Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி: முதல் போட்டியில் வெற்றி பெற்ற கேரளா

Webdunia
சனி, 29 செப்டம்பர் 2018 (22:29 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று முடிவடைந்த நிலையில் இன்று முதல்  ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி தொடர் ஆரம்பமாகியது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் கேரள அணிகள் மோதிய நிலையில் கேரள அணி கொல்கத்தாவை அதன் சொந்த மண்ணில் 2-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது

மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும்  ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி தொடரில் முதல் போட்டியாக இன்று கொல்கத்தா மற்றும் கேரள அணிகள் மோதியது. முதல் பாதியில் இரு அணிகளும் எவ்வளவோ முயன்றும் கோல் அடிக்காததால் 0-0 என்ற கோல்கணக்கில் சமநிலை இருந்தது.

இந்த நிலையில் 2ஆம் பாதியில்  77-வது நிமிடத்தில் கேரள அணியின் போப்லாட்னிக் கோலாக்கி ஒரு கோல் அடித்து தனது அணியை 1-0 என்று முன்னிலைப்படுத்தினார். அதன் பின்னர் 86-வது நிமிடத்தில் கேரள அணியின் சிலாவிசா ஸ்ஜானோவிக் 2-வது கோலை  அடித்ததால் அந்த அணி 2-0 என்று முன்னிலைப் பெற்றது.

அதன்பின்னர் இறுதிவரை கொல்கத்தா கோல் எதுவும் போடாததால் 2-0 என்ற கோல்கணக்கில் கேரளா வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவ விட ரொம்ப எமோஷனலா இருக்கானே!.. குஜராத் தோல்வியால் அழுத நெஹ்ரா மகன்!

போட்டி கைவிட்டு சென்றால் பும்ராவைக் கூப்பிடுவேன்… ஹர்திக் பாண்ட்யா பாராட்டு!

இறுதிப் போட்டி அதிர்ஷ்டக் குழந்தை ஹேசில்வுட்… RCB அணிக்கும் லக்கி பாயாக அமைவாரா?

நான் கோமாளி போல தோற்றமளிக்க விரும்பவில்லை… கொண்டாட்டம் குறித்து பும்ரா பதில்!

முக்கியமான மேட்ச்சில் பட்டையக் கிளப்பிய ‘ஹிட்மேன்’… ஐபிஎல் போட்டிகளில் புதிய சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments