Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி: முதல் போட்டியில் வெற்றி பெற்ற கேரளா

Webdunia
சனி, 29 செப்டம்பர் 2018 (22:29 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று முடிவடைந்த நிலையில் இன்று முதல்  ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி தொடர் ஆரம்பமாகியது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் கேரள அணிகள் மோதிய நிலையில் கேரள அணி கொல்கத்தாவை அதன் சொந்த மண்ணில் 2-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது

மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும்  ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி தொடரில் முதல் போட்டியாக இன்று கொல்கத்தா மற்றும் கேரள அணிகள் மோதியது. முதல் பாதியில் இரு அணிகளும் எவ்வளவோ முயன்றும் கோல் அடிக்காததால் 0-0 என்ற கோல்கணக்கில் சமநிலை இருந்தது.

இந்த நிலையில் 2ஆம் பாதியில்  77-வது நிமிடத்தில் கேரள அணியின் போப்லாட்னிக் கோலாக்கி ஒரு கோல் அடித்து தனது அணியை 1-0 என்று முன்னிலைப்படுத்தினார். அதன் பின்னர் 86-வது நிமிடத்தில் கேரள அணியின் சிலாவிசா ஸ்ஜானோவிக் 2-வது கோலை  அடித்ததால் அந்த அணி 2-0 என்று முன்னிலைப் பெற்றது.

அதன்பின்னர் இறுதிவரை கொல்கத்தா கோல் எதுவும் போடாததால் 2-0 என்ற கோல்கணக்கில் கேரளா வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஓவரில் டெஸ்ட் மேட்ச் விளையாடுவது எப்படி? கற்றுக் கொடுத்த CSK! - கடுப்பான ரசிகர்கள்!

சிஎஸ்கே அணிக்கு டெல்லி கொடுத்த டார்கெட்.. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி கிடைக்குமா?

டாஸ் வென்ற டெல்லி கேப்டன். முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த டெல்லி..!

ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு நியாயம்… திலக் வர்மாவுக்கு ஒரு நியாயமா?- காட்டமாக விமர்சித்த இந்திய வீரர்!

ஈகோ பார்க்காமல் டைம் அவுட்டில் ஓடிவந்த ரோஹித் ஷர்மா… இவர்தான்யா கேப்டன் என சிலாகிக்கும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments