Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி: முதல் போட்டியில் வெற்றி பெற்ற கேரளா

Webdunia
சனி, 29 செப்டம்பர் 2018 (22:29 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று முடிவடைந்த நிலையில் இன்று முதல்  ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி தொடர் ஆரம்பமாகியது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் கேரள அணிகள் மோதிய நிலையில் கேரள அணி கொல்கத்தாவை அதன் சொந்த மண்ணில் 2-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது

மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும்  ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி தொடரில் முதல் போட்டியாக இன்று கொல்கத்தா மற்றும் கேரள அணிகள் மோதியது. முதல் பாதியில் இரு அணிகளும் எவ்வளவோ முயன்றும் கோல் அடிக்காததால் 0-0 என்ற கோல்கணக்கில் சமநிலை இருந்தது.

இந்த நிலையில் 2ஆம் பாதியில்  77-வது நிமிடத்தில் கேரள அணியின் போப்லாட்னிக் கோலாக்கி ஒரு கோல் அடித்து தனது அணியை 1-0 என்று முன்னிலைப்படுத்தினார். அதன் பின்னர் 86-வது நிமிடத்தில் கேரள அணியின் சிலாவிசா ஸ்ஜானோவிக் 2-வது கோலை  அடித்ததால் அந்த அணி 2-0 என்று முன்னிலைப் பெற்றது.

அதன்பின்னர் இறுதிவரை கொல்கத்தா கோல் எதுவும் போடாததால் 2-0 என்ற கோல்கணக்கில் கேரளா வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments