Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹர்திக் பாண்ட்யாவை மும்பை அணியில் யாரும் கேப்டனாக ஏற்கவில்லை: இர்பான் பதான்

Advertiesment
ஹர்திக் பாண்ட்யாவை மும்பை அணியில் யாரும் கேப்டனாக ஏற்கவில்லை: இர்பான் பதான்

Mahendran

, சனி, 4 மே 2024 (16:39 IST)
மும்பை அணியில் உள்ள வீரர்கள் யாரும் ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக ஏற்றுக் கொள்ளவில்லை என இர்பான் பதான் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணி படுமோசமாக விளையாடி வருகிறது என்றும் தொடர் தோல்விகள் அடைந்து வருவது மும்பை அணி வீரர்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
மும்பை அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது என்பதும் 8 போட்டிகளில் அந்த அணி தோல்வி அடைந்துள்ளதால் அந்த அணி அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பே இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
மும்பை அணியின் கேப்டன்  ஹர்திக் பாண்டியா குறித்து இர்பான் பதான் கூறிய போது மும்பை அணியின் வீரர்கள் யாரும் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அதனால் தான் இந்த தடுமாற்றம் ஏற்படுகிறது என்றும் மும்பை ஒரு அணியாக இணைந்து விளையாடவில்லை என்றும் கிரிக்கெட்டில் கேப்டன்ஷிப் மற்றும் அணி நிர்வாகம் மிகவும் முக்கியம் என்றும் இர்பான் பதான் கூறியுள்ளார். 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் திருவிழாவில் இன்று குஜராத்தை எதிர்கொள்ளும் ஆர் சிபி.. ஆறுதல் வெற்றி யாருக்கு?