Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’’ ஐபிஎல் போட்டிகள்’’ நடக்குமா ? நடக்காதா ? பிசிசிஐ முக்கியத் தகவல் !

Advertiesment
IPL matches
, புதன், 15 ஏப்ரல் 2020 (14:30 IST)
இந்தியாவின் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மார்ச் 29ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் திடீரென மார்ச் 24ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நீடிக்கும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால் ஏப்ரல் 15ஆம் தேதி ஐபிஎல் போட்டி தொடங்கும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது.
 

ஆனால் தற்போது மீண்டும் மே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஐபிஎல் போட்டிகள் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ கூறியபோது, ‘மே 3 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் போட்டிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அவர்கள் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை மறந்து விடுங்கள் என்று கூறியிருந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடக்குமா? என்பது சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில், 2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐயின் அதிகாரி கூறியதாக ANI செய்தி முகமை தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காலி மைதாந்த்தில் கோலி எப்படி விளையாடுவார்? ஆஸ்திரேலிய வீரர்கள் ஆர்வம் !